300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மோசகமாத்தான் உள்ளது. அங்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
சீனியர் நடிகரான சிரஞ்சீவி அவரது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்சிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். முதல் கட்டமாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கான்சன்ட்ரேட்டர்கள் ஆகியவற்றை அனந்தப்பூர், குண்டூர் மாவட்டங்களுக்கு அளித்திருக்கிறார். அடுத்து கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை வழங்க உள்ளார். சரியான நேரத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த ஆக்சிஜன் சேவைக்கு தெலுங்குத் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மட்டும் சில நடிகர்கள் லட்சங்களை வழங்கினார்கள். அதற்கும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் எதையும் வழங்கவில்லை. மற்றபடி வேறு எந்த நிவாரண உதவிகளையும் எந்த சீனியர் நடிகர்களும் செய்யாமல் இருப்பது அவர்களது ரசிகர்களிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.