பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வருகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
ராஜமவுலியின் பட கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ஆர்ஆர்ஆர் படத்தின் ஆக்சன் காட்சிகளை பார்த்தபோது என்னையறியாமல் கண்ணீர் வந்தது. மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்களுக்கும் இதேபோன்று வித்தியாசமான உணர்வு ஏற்படும்” என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.