ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

கடந்த வருடம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே, பலருக்கும் பலவிதமான உதவிகளை, தனது சொந்த செலவில் செய்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தமுறை மருத்துவ உதவிகள் பக்கம், தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதேசமயம் தற்போது தடுப்பூசிக்காக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு சிறிய கேள்விதான்.. ஒரு குறிப்பிட்ட மருந்து பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது தெரிந்தே, மருத்துவர்கள் நோயாளிகளிடம் அந்த மருந்தை வாங்கி வரும்படி பரிந்துரை செய்வது ஏன்..? மருத்துவர்களுக்கே அந்த மருந்து கிடைக்காதபோது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்..? எளிதில் கிடைக்காத ஒரே குறிப்பிட்ட மருந்தையே பரிந்துரை செய்வதற்கு பதிலாக மாற்று மருந்து ஏதேனும் இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்தி மக்களின் உயிரைக் காக்க உதவலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோனு சூட்




