சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு. தாமரைக்கு அடுத்து அதிக பாடல்களை எழுதியவர் தேன்மொழி தாஸ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியவர்.
இசையில்லாத இலையில்லை, அநாதி காலம், ஒளியறியாக் காட்டுக்குள், நிராசைகளின் ஆதித்தாய் , காயா, வல்லபி, உள்ளிட்ட பல கவிதை நூல்களை எழுதியிருக்கிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேன்மொழி தாஸ் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சையில் உள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள இயக்குனர் களஞ்சியம், அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.