'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் என கூறப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அவர்கள் தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.