ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நேற்று தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவருடைய கையில் போடும் தடுப்பூசி மட்டும் தெரிகிறது. நயன்தாராவுக்கு போடும் தடுப்பூசி தெரியவில்லை. வெறும் விரல்களால் ஊசி போடுவது போல 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களைக் பகிர்ந்த பலரும் ஊசி எங்கே இருக்கிறது தெரியவில்லை, என்றே கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முன்னணி நடிகையான நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் போட்டோ எடுத்துக் கொண்டாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
அதற்கு நயன்தாரா சரியான விளக்கம் கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.