இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நேற்று தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவருடைய கையில் போடும் தடுப்பூசி மட்டும் தெரிகிறது. நயன்தாராவுக்கு போடும் தடுப்பூசி தெரியவில்லை. வெறும் விரல்களால் ஊசி போடுவது போல 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களைக் பகிர்ந்த பலரும் ஊசி எங்கே இருக்கிறது தெரியவில்லை, என்றே கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முன்னணி நடிகையான நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் போட்டோ எடுத்துக் கொண்டாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
அதற்கு நயன்தாரா சரியான விளக்கம் கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




