துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சுசீந்திரன் இயக்க, ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ஒரு படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது. என்றாலும் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு இதனை தியேட்டரில் வெளியிடலாம் என்று கருதி இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதே போல சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இன்னொரு படமான ஷிவா ஷிவா என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.