பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சுசீந்திரன் இயக்க, ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ஒரு படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது. என்றாலும் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு இதனை தியேட்டரில் வெளியிடலாம் என்று கருதி இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதே போல சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இன்னொரு படமான ஷிவா ஷிவா என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.