உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் | ஹீரோயின் ஆனார் சேஷ்விதா கனிமொழி | 37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள் | பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம் | நவம்பர் மாதத்தில் ராஜமவுலி, மகேஷ்பாபு பட அப்டேட் |
அந்தாள ராட்சசி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. சசிகுமாரின் பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் மாயவன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. ஆனால் அவரை ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக இருக்கும் அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பதும், லாவண்யா யார், அவரை கடத்தியவர்கள் யார் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி. விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.