தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் |
இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே 'இந்தியன் 2' பட விவகாரத்தில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை எதையும் ஏற்றுக் கொள்ளாத ஷங்கர், மீண்டும் தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதையடுத்து ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட தெலுங்கு, ஹிந்திப் படங்களைத் தற்காலிகமாக தடுத்து வைக்க அந்தந்த மொழி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் லைகா நிறுவனம் முறையிட்டுள்ளது.
பொதுவாக திரைப்பட சங்கங்களில் எடுக்கும் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். அதை தன்னுடைய 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்திலேயே பயன்படுத்தியவர் தான் ஷங்கர்.
எனவே, ஷங்கர், ராம் சரண் இணைய உள்ள தெலுங்குப் படம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஷங்கர் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டு 'இந்தியன் 2' படத்தை மீண்டும் இயக்கப் போனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடித்தவுடன் ஷங்கர் படத்திற்கு முன்னதாகவே வேறு ஒரு இயக்குனருடன் ஒரு படத்தில் நடித்து முடிக்க ராம்சரண் திட்டமிட்டுள்ளாராம்.
விரைவில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் விவகாரம் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதில் எடுக்கப்படும் முடிவை வைத்துத்தான் அடுத்த நகர்வு இருக்கும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.