புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே 'இந்தியன் 2' பட விவகாரத்தில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனை எதையும் ஏற்றுக் கொள்ளாத ஷங்கர், மீண்டும் தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அதையடுத்து ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட தெலுங்கு, ஹிந்திப் படங்களைத் தற்காலிகமாக தடுத்து வைக்க அந்தந்த மொழி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் லைகா நிறுவனம் முறையிட்டுள்ளது.
பொதுவாக திரைப்பட சங்கங்களில் எடுக்கும் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். அதை தன்னுடைய 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்திலேயே பயன்படுத்தியவர் தான் ஷங்கர்.
எனவே, ஷங்கர், ராம் சரண் இணைய உள்ள தெலுங்குப் படம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஷங்கர் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டு 'இந்தியன் 2' படத்தை மீண்டும் இயக்கப் போனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடித்தவுடன் ஷங்கர் படத்திற்கு முன்னதாகவே வேறு ஒரு இயக்குனருடன் ஒரு படத்தில் நடித்து முடிக்க ராம்சரண் திட்டமிட்டுள்ளாராம்.
விரைவில் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் விவகாரம் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதில் எடுக்கப்படும் முடிவை வைத்துத்தான் அடுத்த நகர்வு இருக்கும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.