சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' | பிளாஷ்பேக்: தமிழில் டப் செய்யப்பட்ட கார்த்திக் படம் | பிளாஷ்பேக்: காத்தவராயனாக நடிக்க மறுத்த எம்ஜிஆர், நடித்து வெற்றி பெற்ற சிவாஜி | 'காந்தாரா சாப்டர் 1' நான்கு வார ஓடிடி வெளியீடு, ஏன்? | அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? |

தமிழில் எஸ்ஜே சூர்யா இயக்கி, நாயகனாக நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. அதன்பின் 'மருதமலை, காளை, ஜகன்மோகினி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரத்திற்குள் அவருடைய உறவினர்கள் இருவரை அடுத்தடுத்து இழந்துவிட்டார். “மற்றுமொரு கசின் இன்று இறந்துவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் எனது குடும்பத்தில் இரண்டு உறவினர்கள் இறந்துவிட்டார்கள். இப்படி பயனில்லாத, உதவ முடியாத நிலையை பார்ப்பேன் என நினைக்கவில்லை. மனமும், உடலும் மரத்து போவதால் கோபம் கூட மறைந்துவிடுகிறது. இன்னும் எவ்வளவைப் பார்க்க வேண்டும்,” என பத்து நாட்களுக்கு முன்பு டுவீட் செய்துள்ளார்.
அதிலிருந்து தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உதவி செய்யும் விதத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார். நேற்று இன்னும் கோபமாக, “மருத்துவமனையில் பெட் கிடைக்காமலும், சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமலும், வாழ முடியாமல் இருக்க நான் எதற்காக 18 சதவீத ஜிஎஸ்டியைக் கட்ட வேண்டும், அதை நீக்குங்கள்,” எனப் பதிவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாஜக ஆகியோரை டேக் செய்துள்ளார்.