பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தலைவி படத்தின் கதாநாயகியான நடிகை கங்கனா ரணவத், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து இரு தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை பயமுறுத்தும். கோவிட்டை அழிக்க வாருங்கள், அது சாதாரண சிறிய ப்ளு போன்றது. அது நம் மீது அதிகப்படியான அழுத்ததையும் மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது,” எனப் பதிவிட்டிருந்தார்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கொரோனா நோயைப் பற்றி சிறிய ப்ளு என கங்கனா தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என அந்தப் பதிவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது.
தன்னுடைய பதிவு நீக்கியது தொடர்பாக தன்னுடைய கண்டனத்தை வழக்கம் போல கிண்டலாகப் பதிவு செய்துள்ளார் கங்கனா. சமீபத்தில்தான் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக டுவிட்டர் நிறுவனம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.