ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தலைவி படத்தின் கதாநாயகியான நடிகை கங்கனா ரணவத், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து இரு தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை பயமுறுத்தும். கோவிட்டை அழிக்க வாருங்கள், அது சாதாரண சிறிய ப்ளு போன்றது. அது நம் மீது அதிகப்படியான அழுத்ததையும் மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது,” எனப் பதிவிட்டிருந்தார்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கொரோனா நோயைப் பற்றி சிறிய ப்ளு என கங்கனா தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என அந்தப் பதிவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்தக் குறிப்பிட்ட பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது.
தன்னுடைய பதிவு நீக்கியது தொடர்பாக தன்னுடைய கண்டனத்தை வழக்கம் போல கிண்டலாகப் பதிவு செய்துள்ளார் கங்கனா. சமீபத்தில்தான் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக டுவிட்டர் நிறுவனம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.