22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அமீர் இயக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பருத்திவீரன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பொன்வண்ணன், சரவணன் கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இவர்கள் தவிர மண்சார்ந்த பல புதிய முகங்களும் நடித்தார்கள். கார்த்தியின் அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம். கிராமிய பாடகியாகவும், கலைக்குழு கலைஞராகவும் இருந்தவர். பருத்திவீரன் படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்தார்.
74 வயதான பஞ்சவர்ணம் முதுமை காரணமாக நேற்று காலமானார். அவருக்கு நடிகர் கார்த்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.