நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் பாலசரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கொடிவீரன், உள்குத்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் வசித்து வந்த இவரின் தங்கையின் கணவர் இருதினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலசரவணன் டுவிட்டரில், ‛‛அன்பு நண்பர்களே. எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவு செய்து முக கவசம் அணியுங்கள்'' என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.