‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
கொரோனா தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதைக் கடந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் தனது கணவருடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “எப்போது முடிகிறதோ அப்போது அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை சாக்ஷி அகர்வால் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 18 வயதிற்கு மேற்பட்ட சினிமா நடிகர்களும், நடிகைகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பல பொதுமக்களும் தடுப்பூசி போட முன் வருவார்கள்.