திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
கொரோனாவுக்கு நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று(மே 6) உயிரிழந்த நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் இந்நோய்க்கு பலியாகி இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் பரத்வாஜ் இசையில் வெளியான, ‛‛ஒவ்வொரு பூக்களுமே... பாடலில் மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் பாடி, நடித்திருந்தார். அந்தப்படம் தந்த வெளிச்சத்தால் தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவையும் நடத்தி வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோமகன், இருவாரங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் அவரது உடல்நிலை மேலும் பாதிப்படைய சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
![]() |
சினேகா இரங்கல்
ஆட்டோகிராப் படத்தில் நடித்த சினேகா இன்ஸ்டாகிராமில், ‛‛என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நல்நினைவு, "ஒவ்வொரு பூக்களுமே" பாடல். அந்நினைவின் அற்புதமான பங்கு வகித்தவர் அன்பு சகோதரர் கோமகன்! அவரின் மறைவு மிகுந்த துயரளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் குழுவிற்கும் அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்து வருவது திரையுலகினர் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.