காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி |
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தால் தங்கள் திரையுலகத்திற்கும் புதிதாக நன்மைகள் கிடைக்காதா என திரையுலகினர் எதிர்பார்த்து வருகிறார்கள். முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை திரையுலக சங்கத்தினர் சந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
முந்தைய ஆட்சியில் தியேட்டர்களுக்கான தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால், அதை முந்தைய அரசு கடைசி வரை நீக்கவேயில்லை. தற்போது புதிய அரசு அமைய உள்ள நிலையில் அதை கோரிக்கையாகக் கேட்டுள்ளார்கள்.
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி உண்டு. டிக்கெட் கட்டணத் தொகைக்கேற்ப அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, டிஜிட்டல் நிறுவனங்களுடன் அடிக்கடி தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு பதவியேற்றதும் அவரிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து திரையுலகினர் தனித்தனியாக சந்தித்து கேட்க திட்டமிட்டுள்ளனராம்.
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதற்குள் தங்களது சில கோரிக்கைகள் நிறைவேறினால் நல்லது என நினைக்கிறார்கள்.