பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தால் தங்கள் திரையுலகத்திற்கும் புதிதாக நன்மைகள் கிடைக்காதா என திரையுலகினர் எதிர்பார்த்து வருகிறார்கள். முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை திரையுலக சங்கத்தினர் சந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
முந்தைய ஆட்சியில் தியேட்டர்களுக்கான தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால், அதை முந்தைய அரசு கடைசி வரை நீக்கவேயில்லை. தற்போது புதிய அரசு அமைய உள்ள நிலையில் அதை கோரிக்கையாகக் கேட்டுள்ளார்கள்.
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி உண்டு. டிக்கெட் கட்டணத் தொகைக்கேற்ப அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, டிஜிட்டல் நிறுவனங்களுடன் அடிக்கடி தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு பதவியேற்றதும் அவரிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து திரையுலகினர் தனித்தனியாக சந்தித்து கேட்க திட்டமிட்டுள்ளனராம்.
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதற்குள் தங்களது சில கோரிக்கைகள் நிறைவேறினால் நல்லது என நினைக்கிறார்கள்.