தமிழகத்தில் 100 கோடி 'ஷேர்' தந்த 'தி கோட்' ? | ஆஸ்கர் விருதுக்கான படத் தேர்வு : வசந்தபாலன் கமெண்ட் | ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் |
துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமிக்கு கால் பண்ணி, படம் மிகவும் சிறப்பாக இருந்ததாக சொல்லி அவரை வாழ்த்தியவர், தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்த ஆடியோ ஒன்றும் முன்பு சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
அதனால் அண்ணாத்த படத்தை முடித்ததும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் அதுகுறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் தேசிங்கு பெரியசாமி.
அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் குறித்து வெளியாகி வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் எனது அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும். அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்புடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.