26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

தமிழ் டிவிக்களில் முதல் முறையாக பலரது கவனத்தை ஈர்த்த, பல சர்ச்சைகளை உருவாக்கிய ரியாலிட்டி ஷோ என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைச் சொல்லலாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தான் பலரின் மனங்களைக் கவர்ந்தார். அந்நிகழ்ச்சியில் சுற்றியிருந்தவர்களின் நெருக்கடியை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டே பாதியில் வெளியேறினார். இருந்தாலும் இப்போதும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்றால் ஓவியாவின் ஞாபகம் டிவி நேயர்களுக்கு வந்துவிடும்.
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக 'காமன் டிபி'யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.




