Advertisement

சிறப்புச்செய்திகள்

சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறினாரா விஜய்?

26 ஏப், 2021 - 03:17 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-breaks-the-Corona-rule?

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும், திரும்பி வரும் பயணிகளுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி வரும் பயணிகளுக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் விமான நிலையத்திலேயே இருப்பார்கள். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்தப் பயணி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். தொற்று இல்லை என்றால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர். அதே சமயம், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். ஆனால், இன்று காலை அவர் மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த பின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இன்றே அவர் சென்றது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நடிகர் விவேக்கின் அகால மரணத்தால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்ததும் மறுநாளே செல்ல வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

விவேக் இறந்து பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் தரப்பிலிருந்து ஒரு இரங்கல் அறிக்கை கூட வரவில்லை. அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரு வாரம் கழித்து கூட அவர் விவேக் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்லியிருக்கலாமே என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கொரானோ விதிமுறைகளை பின்பற்றுவதில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் பாணியில் தமிழில் உருவாகும் கிங்காங் படம்ஹாலிவுட் பாணியில் தமிழில் உருவாகும் ... தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: சங்க தலைவர் எச்சரிக்கை தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in