சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ராட்சத மனித குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட்டில் கிங்காங் படம் வெளியானது. அதே பாணியில் தற்போது தமிழில் கபி என்ற படம் உருவாகிறது.
முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி இராமசாமி தயாரிக்கிறார். அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர்.
இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.