தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
ராட்சத மனித குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட்டில் கிங்காங் படம் வெளியானது. அதே பாணியில் தற்போது தமிழில் கபி என்ற படம் உருவாகிறது.
முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி இராமசாமி தயாரிக்கிறார். அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர்.
இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.