கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ராட்சத மனித குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட்டில் கிங்காங் படம் வெளியானது. அதே பாணியில் தற்போது தமிழில் கபி என்ற படம் உருவாகிறது.
முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் உருவாகும் படம் இது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி இராமசாமி தயாரிக்கிறார். அரவிந்தசிங் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு கவுசிக்கரா மற்றும் என். இராமசாமி இருவரும் இணைந்து கதை எழுதி உள்ளனர்.
இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் அதிகமான கம்ப்யூட்டர் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கிறார். படம் பற்றிய பர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.