ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் தொடங்கி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. விஜய் அங்கு சென்றதை அடுத்து ஓரிரு நாட்களில் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். அதையடுத்து ஆக்சன், டூயட் உள்பட முக்கியமான பல காட்சிகளை அங்கு படமாக்கியிருக்கிறார் நெல்சன்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் விஜய் 65ஆவது பட யூனிட்டில் உள்ள சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதோடு இந்தியாவிலும் கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது. நேற்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் கடைபிடித்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரி சோதனை செய்து கொள்ளுங்கள். நான் நலமுடன் இருக்கிறேன். உங்களது அன்பு, ஆதரவிற்கு நன்றி'' என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.




