ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் தொடங்கி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. விஜய் அங்கு சென்றதை அடுத்து ஓரிரு நாட்களில் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். அதையடுத்து ஆக்சன், டூயட் உள்பட முக்கியமான பல காட்சிகளை அங்கு படமாக்கியிருக்கிறார் நெல்சன்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் விஜய் 65ஆவது பட யூனிட்டில் உள்ள சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதோடு இந்தியாவிலும் கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது. நேற்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் கடைபிடித்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரி சோதனை செய்து கொள்ளுங்கள். நான் நலமுடன் இருக்கிறேன். உங்களது அன்பு, ஆதரவிற்கு நன்றி'' என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.