என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அஷிஷோர் சாலமன் இயக்கத்தில், நாகார்ஜுனா, தியா மிர்சா மற்றும் பலரது நடிப்பில் உருவான தெலுங்குப் படம் 'வைல்ட் டாக்'. இப்படம் இந்த மாதம் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான வரவேற்பு படத்திற்குக் கிடைக்கவில்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராத காரணத்தால் இப்படம் தியேட்டர் வசூலிலும் சறுக்கியது.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டார்கள். தெலுங்கில் தயாரான இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாம். தெலுங்குப் பதிப்பு முதலிடத்திலும், தமிழ்ப் பதிப்பு ஐந்தாமிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளதாம். எதிர்பார்த்ததை விட குறைந்த காலத்தில் அதிகமான பார்வையாளர்களை இந்தப் படம் பெற்றுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
தென்னிந்திய அளவில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதாம் வைல் டாக். ஓடிடி தளங்களில் ஒரு படம் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரையிலும் ஓடிடி தளங்கள் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையை அறிவித்ததில்லை. இருந்தாலும் இத்தகவல்கள் குறித்து படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளதாம்.
தியேட்டர்களில் கிடைக்காத வரவேற்பு ஓடிடி தளத்தில் கிடைக்கும் என்பதே அதற்குக் காரணம்.