Advertisement

சிறப்புச்செய்திகள்

பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறப்பு அனுமதியுடன் இரவு ஊரடங்கிலும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ?

23 ஏப், 2021 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Annatha-shooting-going-with-spl-permission-even-in-night-curfew

கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்திலும் இரவு 9 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை.

ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் கொரோனா பயம் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், 'அண்ணாத்த' படப்பிடிப்பை மட்டும் நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டதால் இப்படி நடத்துவதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, படத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென்றால் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாம். அதனால், தற்போது தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இருந்தாலும் சிறப்பு அனுமதி பெற்று படத்தை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் அங்கு 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடந்த போது படக்குழுவில் உள்ள சிலருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. ரஜினிகாந்தும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வு எடுத்து பின்னர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

இப்போது கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ள சமயத்திலும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதை தெலுங்குத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணிமீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி சினிமாவில் பிசியாகும் சிவாங்கி சினிமாவில் பிசியாகும் சிவாங்கி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in