300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த வருடம் இதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தாக்கம் பரவியபோது, பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த செலவில் பல விதமான உதவிகளை செய்தவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதன்மூலம் ரியல் ஹீரோ என மக்களிடம் பெயர் பெற்ற சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.