ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

கடந்த வருடம் இதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தாக்கம் பரவியபோது, பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த செலவில் பல விதமான உதவிகளை செய்தவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதன்மூலம் ரியல் ஹீரோ என மக்களிடம் பெயர் பெற்ற சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.




