விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
கனடா நாட்டை சேர்ந்த நீலப்பட நடிகையான சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு, மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன்பிறகு வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அந்த படம் டிராப் ஆனது.
இந்த நிலையில் சன்னி லியோன் இன்னொரு தமிழ் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயோ மீடியா எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் டி.வி.சக்தி, ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கிறார்கள். சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழக ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இங்குள்ள மக்கள் ஹாரர் காமெடியை குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ஒரு புதுமையான ஹாரர் காமெடி திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக இப்படம் வரலாற்று பின்னணியில் ஹாரர் காமெடி கதையினை சொல்லும் படமாக இருக்கும்.
இப்படத்தில் மிகவும் முக்கியமான, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். வேறு நாயகிகள் நடிப்பதை விடவும் சன்னி லியோன் மாதிரியான ஒரு ஹீரோயின், அந்த கதாபாத்திரத்தை செய்யும் போது அக்கதாபாத்திரத்திற்கு ஒரு புது அடையாளம் கிடைக்கும் என நினைத்தோம். ரசிகர்கள் கண்டிப்பாக அவரை திரையில் கொண்டாடுவார்கள்.
மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத்முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னையிலும், மும்பையிலும் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். என்றார்.