தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணும் விவேக்கின் மரணம் குறித்து ஒரு உருக்கமான கவிதை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தம்பி விவேக்
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்தபோதெல்லாம் அன்பைத் தேடிப் போனாய், அறிவைத் தேடிப் போனாய், பண்பைத் தேடிப் போனாய் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போது தாயைத் தேடிப் போனாயோ
தனயனைத் தேடிப் போனாயோ
யாரை நம்பி போனாயோ
எதையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை
மனம் தவிக்கிறது...
எதை நினைத்த என் மனதை
தேற்றிக்கொள்ள
முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது...
இவ்வாறு கவிதை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.