டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணும் விவேக்கின் மரணம் குறித்து ஒரு உருக்கமான கவிதை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தம்பி விவேக்
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்தபோதெல்லாம் அன்பைத் தேடிப் போனாய், அறிவைத் தேடிப் போனாய், பண்பைத் தேடிப் போனாய் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போது தாயைத் தேடிப் போனாயோ
தனயனைத் தேடிப் போனாயோ
யாரை நம்பி போனாயோ
எதையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை
மனம் தவிக்கிறது...
எதை நினைத்த என் மனதை
தேற்றிக்கொள்ள
முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது...
இவ்வாறு கவிதை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.