விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணும் விவேக்கின் மரணம் குறித்து ஒரு உருக்கமான கவிதை வெளியிட்டுள்ளார்.
அதில்,
தம்பி விவேக்
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்தபோதெல்லாம் அன்பைத் தேடிப் போனாய், அறிவைத் தேடிப் போனாய், பண்பைத் தேடிப் போனாய் எல்லாவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போது தாயைத் தேடிப் போனாயோ
தனயனைத் தேடிப் போனாயோ
யாரை நம்பி போனாயோ
எதையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை
மனம் தவிக்கிறது...
எதை நினைத்த என் மனதை
தேற்றிக்கொள்ள
முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது...
இவ்வாறு கவிதை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.