அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது. இதனால் தனக்கும் ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பவன் கல்யாண். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் மருத்துவ அறை ஒன்றில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது. அதேசமயம் அடுத்த சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து எப்போதும் சர்ச்சை கருத்துக்களையே கூறிவரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. இதெல்லாம் ஒரு ட்ராமா என கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராம்கோபால் வர்மா, “இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என எனக்கு தெரியப்படுத்துங்கள்.. சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு நான் பரிசு தருவேன்” என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கும் விதமாக, “இந்த ஆர்ட் டைரக்சன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார், தயவு செய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் கேட்டு, எனக்கு சொல்லுங்களேன்” என்றும் கூறியுள்ளார்.