சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது. இதனால் தனக்கும் ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பவன் கல்யாண். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் மருத்துவ அறை ஒன்றில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது. அதேசமயம் அடுத்த சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து எப்போதும் சர்ச்சை கருத்துக்களையே கூறிவரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. இதெல்லாம் ஒரு ட்ராமா என கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராம்கோபால் வர்மா, “இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என எனக்கு தெரியப்படுத்துங்கள்.. சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு நான் பரிசு தருவேன்” என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கும் விதமாக, “இந்த ஆர்ட் டைரக்சன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார், தயவு செய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் கேட்டு, எனக்கு சொல்லுங்களேன்” என்றும் கூறியுள்ளார்.