பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது. இதனால் தனக்கும் ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் பவன் கல்யாண். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் மருத்துவ அறை ஒன்றில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது. அதேசமயம் அடுத்த சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.
இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து எப்போதும் சர்ச்சை கருத்துக்களையே கூறிவரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. இதெல்லாம் ஒரு ட்ராமா என கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராம்கோபால் வர்மா, “இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என எனக்கு தெரியப்படுத்துங்கள்.. சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு நான் பரிசு தருவேன்” என கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கும் விதமாக, “இந்த ஆர்ட் டைரக்சன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார், தயவு செய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் கேட்டு, எனக்கு சொல்லுங்களேன்” என்றும் கூறியுள்ளார்.