இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். அதன்பின் 'ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'அன்டே சுந்தரநிக்கி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இது பற்றி நஸ்ரியா, “எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். 'அன்டே சுந்தரநிக்கி'யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐதராபாத்திற்கு தனது கணவர் பகத் பாசிலுடன் சென்றுள்ளார். அதனால், பகத்தும் தெலுங்கில் அறிமுகமாக உள்ள 'புஷ்பா' படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் மனைவி நஸ்ரியாவுக்குத் துணையாகத்தான் தற்போது சென்றுள்ளாராம். 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தற்போது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.