நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். அதன்பின் 'ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'அன்டே சுந்தரநிக்கி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இது பற்றி நஸ்ரியா, “எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். 'அன்டே சுந்தரநிக்கி'யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐதராபாத்திற்கு தனது கணவர் பகத் பாசிலுடன் சென்றுள்ளார். அதனால், பகத்தும் தெலுங்கில் அறிமுகமாக உள்ள 'புஷ்பா' படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் மனைவி நஸ்ரியாவுக்குத் துணையாகத்தான் தற்போது சென்றுள்ளாராம். 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தற்போது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.