மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராஜ்கிரண். தொடர்ந்து குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது போட்டோவை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது சாதாரணமாக நடக்கும் விசயம்.
இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
"கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் என்னை வைத்து படம் தயாரிப்பதாக ஏழெட்டு ஆண்டுகள் முன்பு என்னிடம் போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால் இதுவரை படம் எடுக்கவில்லை. அந்த நபர் இப்போது தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.
என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.