காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை(ஏப்., 20) முதல் அமலாக உள்ளது.
இதனால் தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெற முடியாது. ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வருவார்கள். அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வர முடியாது.
இந்நிலையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிர்பப்புத் தெரிவித்து தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்ய உள்ளனராம். இது பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். நாளை அவர்கள் கலந்து பேசி முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஏற்கெனவே 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 200 தியேட்டர்கள் மூடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தியேட்டர்கள் மூடப்பட்டால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் படங்களை வெளியிடத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஒரு வருட காலமாகவே தத்தளித்து வரும் தமிழ்த் திரையுலகம் தற்போதைய கொரானோ பரவல் காரணமாக மேலும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.




