பிளாஷ்பேக்: புதுக்கோட்டை தந்த புதுமை நாயகன் ஏ வி எம் ராஜன் | அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு |
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண். அரசியல், சினிமா இரண்டிலும் பயணித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது வக்கீல் சாப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தன் உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனாவால் கடந்த சில நாட்களாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதுபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.