மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு தமிழில் 'அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் 'ரெண்டகம்' என்றும் மலையாளத்தில் 'ஒட்டு' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நடிகர்கள் பலரும் சொந்தப் படத் தயாரிப்பில் அதிகமாகவே ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்யா படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.