தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், நட்டி எனும் நட்ராஜ் மற்றும் வித்யா பிரதீப் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வந்த இன்பினிட்டி என்கிற மாறுபட்ட கதைகளம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
“மென்பனி புரொடக்ஷன்ஸ்” சார்பாக வை.மணிகண்டன், உ.பிரபு, கி.அற்புதராஜன் மற்றும் த.பாலபாஸ்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என்.பாஸில் எடிட் மற்றும் டாம் ஜோவின் இசையும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாகவும், சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கிய இக்கதை மருத்துவ துறையில் நடக்கும் கருப்பு பக்கங்களை தோலுரிப்பதாக அமையும் என படத்தின் இயக்குனர் சாய் கார்த்திக் ப்ரத்தியேகமாக கூறியுள்ளார்.
சென்னை மற்றும் ஈ.ஸி.ஆர் சுற்று வட்டார பகுதிகளில், தயாரிப்பாளர்களின் விடா முயற்சியால் 23 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு வெகு வேகமாக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இன்பினிட்டி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.