தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

இயக்குனர் ராஜமவுலியின் கடந்த கால படங்களை எடுத்துக் கொண்டால், மகதீரா வெளியானபோது அதுபற்றியே பிரமிப்பாக பேசியவர்கள், ஒரு ஈயை வைத்து அவர் ஈகா என்கிற படத்தை எடுத்து மிரட்டியபோது, மகாதீரவை மறந்தே போனார்கள். அதேபோலத்தான் பாகுபலி படங்களின் இரண்டு பாகங்கள் வெளியானபோது மகதீரா, ஈயை பற்றி மறந்துவிட்டார்கள்.. இப்போது வரை ராஜமவுலி என்றால் பாகுபலி பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் இருவரையும் இணைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இந்தப்படம் அக்-13ல் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார் லண்டன் தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ள உமைர் சந்து என்பவர். படத்தின் சில காட்சிகளின் ரஷ் பார்த்ததாகவும், இந்தப்படம் வெளியானால் மக்கள் அனைவரிடமும் பாகுபலி படத்தையே மறக்கடித்து விடும் அளவுக்கு மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிப்புடன் கூறியுள்ளார் உமைர் சந்து.