என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இயக்குனர் ராஜமவுலியின் கடந்த கால படங்களை எடுத்துக் கொண்டால், மகதீரா வெளியானபோது அதுபற்றியே பிரமிப்பாக பேசியவர்கள், ஒரு ஈயை வைத்து அவர் ஈகா என்கிற படத்தை எடுத்து மிரட்டியபோது, மகாதீரவை மறந்தே போனார்கள். அதேபோலத்தான் பாகுபலி படங்களின் இரண்டு பாகங்கள் வெளியானபோது மகதீரா, ஈயை பற்றி மறந்துவிட்டார்கள்.. இப்போது வரை ராஜமவுலி என்றால் பாகுபலி பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் இருவரையும் இணைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சுதந்திர போராட்ட வீரர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இந்தப்படம் அக்-13ல் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளார் லண்டன் தணிக்கை குழுவின் உறுப்பினராக உள்ள உமைர் சந்து என்பவர். படத்தின் சில காட்சிகளின் ரஷ் பார்த்ததாகவும், இந்தப்படம் வெளியானால் மக்கள் அனைவரிடமும் பாகுபலி படத்தையே மறக்கடித்து விடும் அளவுக்கு மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிப்புடன் கூறியுள்ளார் உமைர் சந்து.