மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 அன்று தொலைக்காட்சியில் வெளியான படம் மண்டேலா. இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோ தயாரித்தது. இந்நிலையில் மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை அடுத்து இப்படத்தை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, படநாயகன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஷ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.