விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து |
சென்னை : கொரோனாவிற்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்ட நடிகர் பார்த்திபன் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் உரிய சிகிச்சைக்கு பின் அவர் தேறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்த நிலையில், அவர் ஓட்டு போடவில்லை. இதுகுறித்து சமூகவலைதளஙகளில் கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை கோவிட்19 தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டது. மருத்துவருக்கு போட்டோ எடுத்து அனுப்பி சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்பதிவை அவர் அழித்துள்ள நிலையில், ‛தனக்கு அலர்ஜி இருப்பதாலேயே பாதிப்பு ஏற்பட்டது. இது அனைவருக்கும் ஏற்படாது. எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும். அதனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.