பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரையுலகினர் பலரும் ஆர்வமாய் ஓட்டளித்தனர். அதேசமயம் பல திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி ஓட்டளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
ஆனால் அவர் ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை டுவிட்டரில் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, ‛‛நானும், என் மனைவியும் ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று 6.55 மணிக்கே சென்றுவிட்டோர். ஆனால் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சிறு பிரச்னை அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் பணிக்கு சென்றுவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரபடுத்தவில்லை. நான் ஓட்டு போட்டுவிட்டேன். என் கடமையை நான் சரியாக செய்துவிட்டேன்'' என வீடியோ மூலமும் தெரிவித்துள்ளார்.