நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரையுலகினர் பலரும் ஆர்வமாய் ஓட்டளித்தனர். அதேசமயம் பல திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி ஓட்டளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
ஆனால் அவர் ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை டுவிட்டரில் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, ‛‛நானும், என் மனைவியும் ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று 6.55 மணிக்கே சென்றுவிட்டோர். ஆனால் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சிறு பிரச்னை அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் பணிக்கு சென்றுவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரபடுத்தவில்லை. நான் ஓட்டு போட்டுவிட்டேன். என் கடமையை நான் சரியாக செய்துவிட்டேன்'' என வீடியோ மூலமும் தெரிவித்துள்ளார்.