ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திரையுலகினர் பலரும் ஆர்வமாய் ஓட்டளித்தனர். அதேசமயம் பல திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி ஓட்டளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
ஆனால் அவர் ஓட்டு போட்ட விரல் மை அடையாளத்தை டுவிட்டரில் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, ‛‛நானும், என் மனைவியும் ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று 6.55 மணிக்கே சென்றுவிட்டோர். ஆனால் ஓட்டு பதிவு இயந்திரத்தில் சிறு பிரச்னை அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் பணிக்கு சென்றுவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரபடுத்தவில்லை. நான் ஓட்டு போட்டுவிட்டேன். என் கடமையை நான் சரியாக செய்துவிட்டேன்'' என வீடியோ மூலமும் தெரிவித்துள்ளார்.