‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி நடித்து வெளியான சிறுத்தை படத்தைப்போலவே சுல்தானும் ஒரு மசாலாப்படம் என்று தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இப்போது சுல்தான் பட நாயகனாக கார்த்தியும் அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். நான் ஒவ்வொரு கதைகளையும் தேர்வு செய்யும்போது எல்லா வகையிலும் ஆராய்வேன். அந்த வகையில் நான் நடித்த கைதி ஒரு வித்தியாசமான அதிரடி திரில்லர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஒரு காவிய நாடகம். ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வரும் சுல்தான் ஒரு மசாலா பொழுதுபோக்கு படம். இது எல்லாதரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.