பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி நடித்து வெளியான சிறுத்தை படத்தைப்போலவே சுல்தானும் ஒரு மசாலாப்படம் என்று தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இப்போது சுல்தான் பட நாயகனாக கார்த்தியும் அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். நான் ஒவ்வொரு கதைகளையும் தேர்வு செய்யும்போது எல்லா வகையிலும் ஆராய்வேன். அந்த வகையில் நான் நடித்த கைதி ஒரு வித்தியாசமான அதிரடி திரில்லர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஒரு காவிய நாடகம். ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வரும் சுல்தான் ஒரு மசாலா பொழுதுபோக்கு படம். இது எல்லாதரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.