'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா |
67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக ‛அசுரன் படமும், அதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தனுஷிற்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். அதுவும் ஏற்கனவே தனக்கு ‛ஆடுகளம் படம் மூலம் தேசிய விருது பெற்று தந்த வெற்றிமாறன் மூலமே ‛அசுரன் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அதில், ‛‛காலையில் எழுந்ததுமே அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருது பெறுவது என்பதே கனவு. ஆனால் இரண்டு விருதுகள் வென்றிருப்பது ஆசீர்வாதமே. இந்தளவுக்கு நான் வருவேன் என கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என் குருவான அண்ணன் மற்றும் இந்த சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.