உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார்கள். இப்படத்தில் தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனால்தான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஆதி, தனஞ்செயா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது, பஹத்தும் வந்துள்ளதால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இப்படம் மேலும் பிரம்மாண்டமாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே கேரளாவில் தனி மார்க்கட் உண்டு. தற்போது பஹத்தும் நடிப்பதால் மலையாளத்தில் இப்படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.