விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, உலக அழகியாக மாறிய ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் நுழைந்து, அப்படியே பெரிய குடும்பத்தின் மருமகளாகவும் மாறினார். இதை தொடர்ந்து பெங்களூருவுக்கு அவர் எப்போதாவது ஒருமுறை வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதேசமயம் குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் அவர் மிஸ் பண்ணுவதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது தங்கையின் திருமண நிகழ்வுக்காக பெங்களூருவுக்கு கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யாவுடன் வந்திருந்தார்.
மணமகள் ஸ்லோகா, ஐஸ்வர்யா ராயின் சித்தி மகளாவார். பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியின்போது, அங்கே வந்திருந்த அனைவரிடமும் சகஜமாக கலந்து பழகி ஆச்சர்யப்படுத்திய ஐஸ்வர்யா ராய், மணமக்களுடன் மேடையிலும் நடனம் ஆடி விருந்தினர்களை வியப்படைய வைத்தாராம். .