கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா |
ரேணிகுண்டா படத்தில் குணசித்ர நடிகையாக அறிமுகமானர் சஞ்சனா சிங். அதன்பிறகு காதல் பாதை, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடினார்.
இந்த நிலையில் சஞ்சனா தனது கவனத்தை ஓட்டல் தொழிலை நோக்கித் திருப்பியுள்ளார். யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழாவில் இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, நடிகர் பரணி, சம்பத், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் ராதிகா, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சஞ்சனா சிங் கூறியதாவது: இந்த கொரோனா காலகட்டத்தில் தான் உணவின் தேவையை உணர்ந்தேன். நான் மட்டுமல்ல, உலகமே உணர்ந்தது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாம் ஏதாவது இன்னொரு தொழிலையும் வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணினேன். நம்மில் பலர் சினிமா மட்டுமே என இயங்கி வாய்ப்புகள் இல்லாதபோது திணறிவிடுகிறோம். இந்த சினிமாவில் தைரியமாக பாதுகாப்பாக இயங்க, இன்னுமொரு நிரந்தர வருமானமுள்ள தொழிலை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது என நினைத்தே இந்த யம்மியோஷா திட்டத்தை தொடங்கினேன். நடிப்பில் முழுக்கவனம் செலுத்தும் அதேவேளையில் இந்த யம்மியோஷாவையும் சிறப்புற நடத்த முனைவேன். அதற்கான உழைப்பு என்னிடம் இருக்கிறது. என்றார்.