இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
திருமணத்துக்கு பின்னும் ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் கிரேஸ் குறையாத நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். குறிப்பாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, விஷ்ணு மஞ்சுவுடன் நடித்துள்ள 'மொசகல்லு' என இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக இருகின்றன. இதையடுத்து நாகர்ஜுனா ஜோடியாக நடிக்க இருக்கிறார் காஜல் அகர்வால்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை தானே கூறியுள்ள காஜல் அகர்வால், இந்தப்படத்தில் தான் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் நிறைவேற போவதால், படப்பிடிப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். இந்தப்படத்தை பிரவீன் சத்தாரு இயக்குகிறார்.