காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி |
சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வரும் படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் டிசம்பர் 13-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி உள்பட பிரபலங்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஒருவார காலம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருவதால் இப்படத்திலும் வில்லனாகவே நடிப்பார் என்று தெரிகிறது.