மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்பட சில படங்களில் நடித்தவரான யாஷிகா ஆனந்த், தற்போது பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தனது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கிறங்கடித்து வருகிறார்.
இந்தநிலையில் துபாய் சென்றிருந்தபோது விமானத்தில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. வானில் பறந்தபடி எந்தவித பயமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதோடு, ''திஸ் இஸ் கிரேசி, நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று'' என்றும் பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.