Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரிடியத்தை வைத்து ரூ.26.20 கோடி மோசடி : நடிகை ஜெயசித்ரா மகன் கைது

17 மார், 2021 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Actress-Jayachitra-son-arrested-in-foregery-case

சென்னை: அரியவகை இரிடியத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தருவது போல நடித்து, தொழில் அதிபரிடம், 26.20 கோடி ரூபாய் சுருட்டிய நடிகை ஜெயசித்ராவின் மகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயசித்ரா 60. நடிகையான இவர், குறத்தி மகன், அரங்கேற்றம் உட்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவரது கணவர் கணேஷ், 62. தொழில் அதிபரான இவர், 2020, டிச., 4ல் இறந்தார். இவர்களது ஒரே மகன் அம்ரீஷ், 33; இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன் தாய் இயக்கிய, நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அம்ரீஷ்க்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, நெடுமாறன், 68 என்பவருக்கும், 2013ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகள், தங்களிடம் அரியவகை இரிடியம் உள்ளது. இதை மலேஷியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது. எங்களுக்கு, 26.20 கோடி ரூபாய் கொடுத்தால் போதும். மீதி தொகை முழுதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என, நம்ப வைத்துள்ளனர்.

மேலும், தங்களிடம் இருப்பது அரியவகை இரிடியம் தான் என்பதை, கனடா ஆய்வகம் உறுதி செய்து சான்று அளித்து இருப்பதாக, ஆவணத்தை காட்டியுள்ளனர். இவரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கூட்டாளிகள் வாயிலாக, நட்சத்திர ஓட்டலில் அந்நாட்டு நிறுவன பிரதிநிதிகள், அரியவகை இரிடியத்தை, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

இதை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகளிடம், 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மலேஷிய நிறுவனத்திடம் இருந்து பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுமாறன், நடிகையின் மகனை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது பற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை பிடித்து, விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்தனர்; கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
சிறுவயதிலேயே ஜிம் ஆர்வத்தை தூண்டியவர் சுனில் ஷெட்டி : ராணாசிறுவயதிலேயே ஜிம் ஆர்வத்தை ... மீண்டும் தொடங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு : தமிழ்நாட்டிலேயே படத்தை முடிக்க முடிவு மீண்டும் தொடங்கியது அண்ணாத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18 மார், 2021 - 11:25 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  சதுரங்க வேட்டை
Rate this:
Manian - Chennai,ஈரான்
18 மார், 2021 - 07:29 Report Abuse
Manian குடி, சுதாடடம் , பேராசை மூளையில் ஏற்படும் கர்ப்பகால கோளாறுகள், மரபணு மூலம் வருவதாக கண்டுள்ளார்கள் சித்ரா மகன் தெருவில் பிச்சை வாங்க முடியுமா? இரிடியம் வாங்க ஆசை உள்ளவனும் பேராசைக்காரரன்தானே நெடுமாறனும் இப்படி யாரை ஏமாத்தினானோ,இல்லாட்டி 9-5 அரசாங்க மாமூல் வியாதியா? அம்ரீஷ் ஆட்டொக்காரனையா ஏமாத்தினான்? ஒவ்வொரு நிமிஷமும் ஏமாற்றவன் பிறந்துகிட்டே இருப்பான் இல பூனைகள் திங்க ஏராளமான எலி குட்டி போடும், சில சிங்கம், புலி கொன்னு திங்கத்தானே நூறு மான்கள் எல்லாம்் அவன் செயல்புதிய திருந்திய சாமியார் பூமிநாதன்(பூர்வோத்தர கேடி, குதிரைப் பந்த இழப்பாளி - கேளப்பன்)
Rate this:
18 மார், 2021 - 06:24 Report Abuse
சூரியா அப்பா கணேஷ் செய்த வேலைகளை மகன் தப்பாமல் செய்து வருகிறான். எத்தனை BANK களில் பொய்யான கடன் வாங்கி கணேஷ் ஏமாற்றி உள்ளார்!
Rate this:
சிவகிரி - மணிகிராமம்,இந்தியா
18 மார், 2021 - 05:39 Report Abuse
சிவகிரி சொந்த ஊருகேத்த தொழில் இதிலென்ன ஆச்சரியம். அவர்களில் பலர் இப்படிதானே.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 மார், 2021 - 03:53 Report Abuse
Bhaskaran T.நகரில் வீடு வழக்குக்கு அப்புறம் இந்த அம்மா கையில் வந்துடுச்சு அதனை விற்று பிள்ளையை மீட்கலாம்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in