ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார் மயில்சாமி.
அவர் கூறுகையில், ''நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன். பல ஆண்டுகாலம் அவரின் அரசியலை பார்த்தவன். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கொதித்து போய் தான் களத்தில் இறங்கி உள்ளேன். அரசியலில் பலரும் சுயநலமாகவே செயல்படுகின்றனர். நான் இந்த ஏரியா மக்களிடம் பல ஆண்டுகளாக பழகி உள்ளேன். என்னிடம் காசு, பணம் இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. ரொம்ப சாதாரணமானவன். கமல் முதல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தாலும் நான் எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க மாட்டேன்'' என்றார்.