ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணமடைந்தார். நேற்று காலை முதலே அவரது இல்லத்திற்கு பல சினிமா பிரபலங்கள் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கு இறுதி மரியாதை செய்தார். மேலும், மயில்சாமியின் கடைசி ஆசையான சிவன் கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன் என்றும் சொன்னார்.
ரஜினிகாந்த், நேற்று பெங்களூருவில் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து சென்னை திரும்பியவர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுமார் 40 ஆண்டு காலமாக ரஜினிகாந்த், மயில்சாமி இடையே நட்பு இருந்துள்ளது. இருவரும் சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய், அஜித் உள்ளிட்ட சில சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் மயில்சாமியின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில் ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.