'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணமடைந்தார். நேற்று காலை முதலே அவரது இல்லத்திற்கு பல சினிமா பிரபலங்கள் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கு இறுதி மரியாதை செய்தார். மேலும், மயில்சாமியின் கடைசி ஆசையான சிவன் கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன் என்றும் சொன்னார்.
ரஜினிகாந்த், நேற்று பெங்களூருவில் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து சென்னை திரும்பியவர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுமார் 40 ஆண்டு காலமாக ரஜினிகாந்த், மயில்சாமி இடையே நட்பு இருந்துள்ளது. இருவரும் சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய், அஜித் உள்ளிட்ட சில சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் மயில்சாமியின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில் ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.