ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணமடைந்தார். நேற்று காலை முதலே அவரது இல்லத்திற்கு பல சினிமா பிரபலங்கள் சென்று இறுதி மரியாதை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கு இறுதி மரியாதை செய்தார். மேலும், மயில்சாமியின் கடைசி ஆசையான சிவன் கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன் என்றும் சொன்னார்.
ரஜினிகாந்த், நேற்று பெங்களூருவில் அவரது அண்ணன் சத்யநாராயணாவின் 80வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கிருந்து சென்னை திரும்பியவர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுமார் 40 ஆண்டு காலமாக ரஜினிகாந்த், மயில்சாமி இடையே நட்பு இருந்துள்ளது. இருவரும் சிறந்த சிவ பக்தர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய், அஜித் உள்ளிட்ட சில சினிமா ஹீரோக்கள், ஹீரோயின்கள் மயில்சாமியின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில் ரஜினிகாந்த் போன்ற சீனியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.