சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரான்சில் திரைப்படத் துறையினருக்கு சீசர் விருதுகள் வழங்கப்படுகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக பிரான்சில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சீசர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில், சிறந்த உடைக்கான விருதை அறிவிப்பதற்காக கோரின் மாசிரோ என்ற 57 வயது நடிகை மேடைக்கு அழைக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கு வரும்போது வேறு உடை உடுத்தியிருந்த கோரின், மேடைக்கு அழைத்த போது இரத்தம் தோய்ந்தது போல் காட்சியளிக்கும் உடை ஒன்றை அணிந்திருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
விழா ஏற்பாட்டாளர்கள் சுதாரிக்கும் முன்னர், மேடையிலேயே தன் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார் கோரின். அவரது உடலில், 'கலை இல்லையெனில், எதிர்காலம் இல்லை' என பிரெஞ்சு மொழியில் அவர் எழுதியிருந்தார். கூடவே, கலையைத் திருப்பிக் கொடுங்கள் ஜீன் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்சுக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரினின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.




