இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. அவருக்கும் நடிகை சாயிஷாவுக்கும் 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது. அதற்கு முன்பே அவர்கள் இருவரும் 'கஜினிகாந்த்' படத்தில் சேர்ந்து நடித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவர்கள் காதல் வெளியில் தெரியவில்லை. 'காப்பான்' படப்பிடிப்பு சமயத்தில் தான் அவர்கள் காதல் செய்தி வெளியில் வந்தது.
அப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 2019ம் வருடம் மார்ச் மாதம் 10ம் தேதி இருவரும் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இன்று இருவரும் தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் சாயிஷா நடித்து வருகிறார். அவரும் ஆர்யாவும் சேர்ந்து நடித்துள்ளள 'டெடி' படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வருகிறது. சாயிஷா கன்னடத்தில் நடித்துள்ள 'யுவரத்னா' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு, “எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆக்குவதற்கு நன்றி, இனிய திருமண நாள் வாழ்த்துகள் மனைவியே,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா. அதற்கு பதிலளித்துள்ள சாயிஷா, “உங்களை இப்போதும் எப்போதும் நேசிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
'கஜினிகாந்த்' படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆர்யா, சாயிஷா இருவரும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.